காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)
மணி முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட வெளியே வந்தான் அப்போது அவன் பெயர் சொல்லி யாரோ கூப்பிட்டார்கள் திரும்பிப் பார்த்தால்அவன் நண்பன் கணபதி! என்னப்பா மணி அடுத்து உன் வீட்டு கல்யாண சாப்பாடு என்றான், ஷோபா தானேபெண்என்றான். அதற்கு ஆங்....... இல்லை யப்பா! என்றான். உன் பையன் அந்த பெண்ணை பார்த்தாகசொன்னார்களே. பெண் நன்றாக இருப்பாளே! குடும்பமும் நல்ல வசதியான குடும்பம் ஆச்சே! என் பையன் அபிஷேக் அந்தப்பெண் நம்குடும்பத்திற்கு ஒத்துவராது என்கிறான். ஏண்டா என்று கேட்டால் பெண் பார்க்கும் பொழுது இருவரும் பேசிகொண்டார்கள்.. ஷோபா உங்களை எனக்கு பிடித்திருக்கிறது ஆனால் என் தாத்தா பாட்டிக்கு இருக்கும் டிரஸ் சென்ஸ்கூட உங்க வீட்டில் யாருக்கும் இல்லை என்று கூறினாளாம். இப்பொழுது இப்படி கூறும் பெண நாளைக்கு கல்யாணம் ஆகி வீட்டிற்கு வந்தால் நான் கர்ணன் பட்ட பாடு தான் பட வேண்டி வரும் எனவே இந்த பெண் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டான் அது என்னப்பா கர்ணன் பட்டபாடு அது என்ன கதை என்று கணபதி கேட்க நானும் அதையே தான் கேட்டேன் அந்த கதையையும் சொன்னான். அது என்ன கதை என்று எனக்கும் சொல்லேன் என்று கணபதி