தமிழ் புத்தாண்டு
அனைவருக்கும் விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்
கொண்டாடும் முறை;- முதல் நாளே சுவாமி முன் ஒரு கண்ணாடியை
வைத்து அதன்முன் ஒரு தட்டில் வெற்றிலை பழங்கள் , தேங்காய் , பூ
நாணயங்கள் ஆகியவற் றை வைத்து அலங்கரித்து வைக்கவேண்டும் .
புத்தாண்டு தினத்தன்று காலையில் எழுந்ததும் விளகேற்றி பிரார்த்தனை
செய்தபின் வேலைகளை தொடங்கவேண்டும் .புத்தாண்டு தினம் அன்று
பருப்பு ,பாயசம் , வடை , போளி , மாங்காய் &வேப்பம்பூ ,வெல்ல்ம் கலந்த
பச்சடி செய்வது வழக்கம் .கோயிலுக்கு சென்று வழிபடுவர்கள
மாலையில் பஞ்சாங்கம் (விஜய வருடம் .)எடுத்து அவ்வருட பலன்களை
படித்து கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்
மாங்காய் & வேப்பம் பூ பச்சடி எதற்காக செய்யவேண்டும் ?அதன்
------------------------------------------------------------------------------------------------------
விளக்கமும் செய்முறையும் ;- வாழ்க்கை என்பது இன்பம் , துன்பம்
---------------------------------------
இரண்டும் மாறி மாறி வரும் இதை நமக்கு உணர்த்த நம்
முன்னோர்கள் வருடத்தின் தொடக்கத்திலேயே சமையல் மூலம் .
உணர்த்தி உள்ளார்கள் .
பச்சிடி செய்யும் முறை;-மாங்காயை தோல் சீவி பின் நன்கு துருவி
---------------------------------------
தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும் .அதில் மாங்காய் அளவு
வெல்லம் போட்டு கொதிக்க வெய்க்கவேண்டும் இரண்டும் கலந்து
சிறிது கெட்டியாகும் சமயம் வேப்பம் பூ (புதிய அல்லது காய்ந்த )ஒரு
ஸ்பூன் ,அரை ஸ்பூன் கடுகு , ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு
ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து கொட்டவேண்டும் .இந்தபச்சடியில்
மாங்காயின் புளிப்பு , வெல்லத்தின் இனிப்பு ,வேப்பம் பூவின் கசப்பு .
மிளகாயின் காரம் ,ஆகியவை கலந்து ஒரு புது சுவையுடன் இருக்கும்
இவ்வாறு நம்முடைய அன்றாட வாழ்க்கையும் இருந்தால் தான்
சுவையுடன் ஆனந்தமாக இருக்கும் .
-----------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக